/* */

காஞ்சிபுரம் பூ வியாபாரி வீட்டின் முன் நிறுத்திய காரில் தீப்பற்றி எரிந்தது: மக்கள் கடும் அதிர்ச்சி

காஞ்சிபுரத்தில், பழைய ரயில்நிலையம் அருகே, பூ வியாபாரி வீட்டின் முன் நிறுத்திய காரில் பற்றிய தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் பூ வியாபாரி வீட்டின் முன் நிறுத்திய காரில் தீப்பற்றி எரிந்தது: மக்கள் கடும் அதிர்ச்சி
X

காஞ்சிபுரம் பழைய ரயில்நிலையம் அருகே, பூ வியாபாரி வீட்டின் முன் நிறுத்திய காரில் பற்றிய தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்கள். (உள்படம்) எலும்புக்கூடு போல ஆன ஆம்னி கார்.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே உள்ள வையாவூர் சாலையில் வசிப்பவர் மோகன். பூக்கடை சத்திரம் பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரி மோகன் தனது வியாபாரத்திற்காக ஆம்னி கார் வைத்திருந்த நிலையில் தினம் தோறும் வீட்டின் முன் புறத்தில் காரை நிறுத்தி வைப்பது வழக்கம்.

கடந்த ஓரு வார காலமாக ஆம்னி காரை வெளியே எடுக்காத நிலையில்,நேற்று இரவு நேரத்தில் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்திருந்தது. இந்நிலையில் இன்று காலையில் ஆம்னி கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. கார் தீ பற்றி எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆம்னி காரில் மளமளவென பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். ஆனால், அதற்குள் ஆம்னி கார் முற்றிலுமாக எரிந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு எலும்புக்கூடாக மாறி பரிதாபமாக காட்சி அளித்தது. இதையடுத்து, மர்மமான முறையில் கார் தீப்பற்றி எரிந்தது குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Updated On: 4 July 2022 10:40 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!