/* */

கல்குவாரிகளால் சுவாச கோளாறு - பொதுமக்கள் மறியல்

கல்குவாரிகளால் சுவாச கோளாறு - பொதுமக்கள் மறியல்
X

கல்குவாரிகளால் சுவாச கோளாறு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்தின் அருகே திருவண்ணாமலை மாவட்டத்தை ஒட்டியுள்ள சுருட்டல் கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் எம்.சாண்ட் இயங்கி வருகிறது. கல்குவாரி பயன்பாட்டிற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் 24 மணி நேரமும் இயங்கி வருவதால் லாரிகளில் ஏற்றி செல்லப்படும் எம்சாண்ட் துகள்கள் மற்றும் வீடுகளில் சமையல் அறை வரை பரவி வருவதாகவும் இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு மற்றும் பெரும் அசௌகரியங்கள் ஏற்படுவதாக கூறி கூட்டு சாலை அருகே கல்குவாரி செல்லும் லாரியை வழிமறித்து குவாரிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து கல்குவாரியிடம் பேசுவதாகவும் இடையூறு இல்லாமல் வாகனங்கள் செல்ல அரசு அதிகாரிகளுடன் பேசி சுமூகமாக பிரச்சனை தீர்க்கப்படும் என கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 12 Feb 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்