/* */

சுங்குவார்சத்திரத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

சுங்குவார் சத்திரத்தில் ஆக்கிரமிப்பு இடங்களை ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் இன்று மீட்டனர்.

HIGHLIGHTS

சுங்குவார்சத்திரத்தில்   ரூ.50 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
X

சுங்குவார் சத்திரத்தில் இன்று ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே திருமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 3.30 ஏக்கர் பரப்பளவில் குளத்தை சுற்றி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியை சேர்ந்த பலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குளத்தை சுற்றி உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலந்து வருவதாலும் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் குப்பைகளை குளத்தில் பொதுமக்கள் கொட்டி வருவதாலும் குளத்தின் நீர் தற்போது பச்சை நிறமாக மாறி முற்றிலும் மாசடைந்துள்ளது.

குளத்தை தூய்மைப் படுத்தி அதனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என திருமங்கலம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதில் குளத்தை ஆக்கிரமிப்பு செய்து சுமார் 63 கடைகளும் 34 வீடுகளும் கட்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வருவாய்த் துறையினரால் நோட்டீஸ் வழங்கப்பட்டது

ஆக்கிரமிப்பாளர்கள் வருவாய்த் துறையினரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி வந்த நிலையில் இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் 5 ஜே.சி.பி. இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டனர்.

Updated On: 18 April 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  6. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  8. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  9. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்