Begin typing your search above and press return to search.
குழந்தை திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது உறவினர் 4 பேர் கைது
சின்ன காஞ்சிபுரத்தில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர், அதற்கு உடந்தையாக உறவினர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் தாலுக்கா பெரிய ஏழாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் குமரேசன் என்பவருக்கும் கடந்த 13ஆம் தேதி குழந்தைத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த சமூகநலத்துறை நிர்வாகிகள் செல்வி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மணமகன் குமரேசன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பெண்ணின் தாயார் உஷா ராணி மற்றும் அவரது உறவினர்கள் சரஸ்வதி வீரராகவன் ஆகியோரை குழந்தைத் திருமணம் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.