வீடு திட்டம் மணல் கொள்ளைக்காகவே காஞ்சியில் கமல் காட்டம்
காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்ய கட்சியின் வேட்பாளர்களை அறிமுக செய்து பிரசாரம் செய்தார் கமல்ஹாசன். அப்போது அதிமுகவின் அனைவருக்கும் வீடு திட்டம் என்பது மணல் கொள்ளைக்காக கொண்டு வரப்பட்டது என காட்டமாக பேசினார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தார். பிள்ளையார் பாளையம் பகுதியில் காஞ்சிபுரம் வேட்பாளர் கோபிநாத்திற்கு பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.
அதன்பின் காந்தி சாலை பெரியார் தூண் அருகே நடைபெற்ற பொதுகூட்டத்தில் காஞ்சிபுரம், வேலூர்., சோழிங்கநல்லூர், செய்யாறு, திருவண்ணாமலை வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் , அதிமுக தேர்தலில் அளித்த இலவச வீடுகள் திட்டம் மீண்டும் மணல் கொள்ளை அடித்து தங்கள் கஜானாவை நிரப்பி கொள்ளவே எனவும் , வாசிக்க மெஷின் தருவதாக கூறும் இவர்கள் பல வீடுகளில் கழிப்பறையே இல்லாத நிலை உள்ளது. குடிநீர் தேவை பூர்த்தி செய்யாமல். என்ன ஏமாற்று வேலையை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு, மாற்றாக எங்களுடைய இளைஞர்கள் உங்களுக்கு பணியாற்ற தயாராகவுள்ளதால் டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.