/* */

குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களுக்கு இலவச மோர் வழங்கிய மாநகராட்சி

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு அளிக்க வரும் மக்களுக்கு குடிநீர் மற்றும் மோர் இலவசமாக வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களுக்கு இலவச மோர் வழங்கிய மாநகராட்சி
X

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கப்பட்ட இலவச மோரை பருகும் பொதுமக்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.

இதில் பொதுமக்கள் வருவாய்த்துறை, மின்சாரம் மற்றும் கிராம வளர்ச்சி பணிகள் , ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பொதுமக்கள் மனு அளிப்பது வழக்கம்.

இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கான மனுக்கள் வருவது வழக்கம். தற்போது கோடை கத்திரி வெயில் துவங்கி உள்ளதால் பொதுமக்களுக்கு உடல் வெப்பத்தை தணிக்கும் வகையில் சுகாதாரமான குடிநீர் மற்றும் மோர் வழங்க மாவட்ட நிர்வாகம் திட்டமிடப்பட்டது.

இப்பணியினை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் மாநகராட்சிக்கு அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும் இடம் அருகே மனு அளிக்க வந்த பொது மக்களுக்கு மோர் மற்றும் குடிநீர் இலவசமாக அளிக்கப்பட்டது.

இச்செயலை மனு அளிக்க வந்த அனைத்து பொதுமக்களும் , அரசு அலுவலர்களும் வரவேற்றனர்.

Updated On: 9 May 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...