தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்
தேர்வு அறையில் ஓழூங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு நிரந்தர தேர்வு தடை விதிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்தது.
HIGHLIGHTS
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவருக்கு நடத்தப்படும் அரசு தேர்வு கடந்த ஐந்தாம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதேபோல் பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளும் துவங்கி தற்போது தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது இது மட்டும் இல்லாமல் தேர்வு அறையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு நிரந்தர தேர்வு தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது.தேர்வு மையங்களில் மாணவர்களை கண்காணிக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டது.
இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு இயற்பியல் மற்றும் பொருளியல் பாட பிரிவுகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் தனியார் மேல் நிலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பாடப்புத்தகத்திலிருந்து பாடக் குறிப்புகளை கிழித்து தன்னுடைய உடலுக்குள் மறைத்து வைத்தனர். பொதுமக்கள் நடமாடும் பகுதியிலே இச்செயலை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இவர்களை தேர்வு செய்ய அதிகாரிகள் சோதனை செய்கிறார்களா என கண்காணிக்க சென்றபோது, ஏற்கனவே தேர்வு அறிக்கை சென்ற மாணவர்களிடம் இருந்து பல்வேறு குறிப்புகளை பறிமுதல் செய்து குப்பையாக வைத்திருந்தது மேலும் அதிர்ச்சியடைய வைத்தது.
இது குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன செயலை கட்டுப்படுத்தவே திணற வேண்டியுள்ளதாகவும் , தேர்வு விதிகளை கண்டு கொள்ளவதே இல்லை என என வருத்தத்துடன் தெரிவித்தார்.