/* */

பா.ம.க. கட்சி நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

பா.ம.க. கட்சி நிர்வாகிகள் மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் நீக்கப்படுவார்கள் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.

HIGHLIGHTS

பா.ம.க. கட்சி நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
X

பா.ம.க.  கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பா.ம.க. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பெ.மகேஷ் குமார் தலைமையில் காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, கட்சியின் மாநில தேர்தல் பணிக்குழுவின் தலைவர் ஏ.கே.மூர்த்தி,முன்னாள் எம்.எல்.ஏ.சக்தி கமலாம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசும்போது

பா.ம.க. தொடங்கி 32 ஆண்டுகள் ஆகிறது. தமிழகத்தில் 3 ஆவது பெரிய கட்சி எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை ஆளும் கட்சியாக வர முடியவில்லை.இரு கட்சிகளே மாறி,மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றன.இதற்கு காரணம் மக்கள் பா.ம.க. மீது நல்ல மதிப்பு வைத்திருந்தாலும் தேர்தலின் போது பெரும்பாலான வாக்காளர்கள் பணத்துக்காக மாறி விடுகிறார்கள்.

பா.ம.க. ஆளும் கட்சியாக வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிற நேரம் வந்து விட்டது.எனவே கட்சியின் மூத்த நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுடன் இணைந்து கிராமங்களில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.வாரத்துக்கு இரு முறையோ அல்லது ஒரு முறையோ மக்களின் உள்ளூர் பிரச்சினைகளுக்காக அந்தந்த பகுதிகளில் போராட்டங்களை நடத்த வேண்டும்.

பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றில் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.பல தொழிற்சாலைகளில் வட இந்தியர்கள் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் அதில் 80 சதவிகிதம் தமிழர்களாக இருக்க வேண்டும்.

தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது போன்றவைகளுக்காக கட்சித் தொண்டர்கள்,நிர்வாகிகள் போராட்டங்களில் ஈடுபடும் போது நேர்மையாக செயல்பட வேண்டியது அவசியம்.

சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்சியில் பதவிகளில் இருப்பவர்களுக்கு இடமில்லை.சேவை செய்யவும்,மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவுமே கட்சிகளில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.எனவே நிர்வாகிகள்,தொண்டர்கள் மீது புகார்கள் வந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Updated On: 16 April 2022 3:47 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு