/* */

காஞ்சிபுரம்: இருசக்கர வாகனத்தில் மது கடத்திய இருவர் கைது!

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 95 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: இருசக்கர வாகனத்தில் மது கடத்திய இருவர் கைது!
X

மதுபானங்கள் கடத்தியதாக கைதான அருள்தாஸ், கஜேந்திரன், பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கினால் அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆங்காங்கே மது பாட்டில்களை கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் என்ற இடத்தில் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் காவலர்கள் முரளி ,யுவராஜ், கோபிநாத் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், கர்நாடக மாநிலத்தில் இருந்து 95 மதுபாட்டில்களை விற்பனைக்காக எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையொட்டி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், காஞ்சிபுரம் அடுத்த ஒழையூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ்(25), கஜேந்திரன்(30) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு சிறையில் அடைத்தனர்.

Updated On: 1 Jun 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!