/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நாம் தமிழர் சார்பில் 9 பேர் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 9 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நாம் தமிழர் சார்பில் 9 பேர் வேட்பு மனு தாக்கல்
X

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 9 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளுக்கான உறுப்பினர் பதவிகளுக்கு நேற்றுவரை முப்பத்தி நான்கு நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று நான்காவது நாளாக வேட்புமனு துவங்கியதில் இருந்து பல்வேறு கட்சியினர், சுயேச்சைகள் என பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நாம் தமிழர் கட்சி இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வழக்கம்போல் தனித்துப் போட்டியிடுகிறது. மாநகராட்சியில் இன்று சபரிநாதன், அனிதா உள்ளிட்ட மொத்தம் 9 நபர்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் தேர்தல் அலுவலரிடம் அளித்து ஒப்புகை சீட்டு பெற்றனர்.

Updated On: 2 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...