Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் : சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 பேர் அதிரடி கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு குற்ற வழக்குகள் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த விஷ்வா, பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பாபா , தாமல் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் என்கிற வெள்ளை, தாமஸ் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்கிற ஊசலான் ஆகிய நால்வரை சிறப்பு தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.