பட்டாசு வெடித்ததில் அதிமுக பிரமுகர் காயம்
காஞ்சிபுரம் பாமக வேட்பாளரை வரவேற்க பிள்ளையார்பாளையம் பகுதியில் வெடிக்கப்பட்ட பட்டாசில் கற்கள் சிதறியதில் அதிமுக மாவட்ட பிரமுகருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் மகேஷ்குமார் போட்டியிடுகிறார்.இவர் தனது கூட்டணியிருடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் கிராமங்களில் பிரச்சாரம் முடித்து விட்டு தற்போது காஞ்சிபுரம் பெருநகராட்சியில் வாக்குகள் சேகரித்து வருகின்றார். இந்நிலையில் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளரை வரவேற்க அதிமுக சார்பில் வெடிகள் வெடித்து வரவேற்றனர்.
இதில் ஒரு வெடித்ததில் அருகிலிருந்த கற்கள் சிதறியதில் அருகிலிருந்த மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மீது பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. முன்னதாக நேற்று காஞ்சிபுரம் வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களிடம் தயவு செய்து பட்டாசுகள் வெடித்து பிறருக்கு தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.