/* */

சிறப்பு காய்ச்சல் முகாம் எங்கெல்லாம் நடைபெற்றது என தெரியாமல் குழப்பம்?

Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மட்டுமல்லாமல் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற காத்துக் கிடக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

HIGHLIGHTS

சிறப்பு காய்ச்சல் முகாம்  எங்கெல்லாம் நடைபெற்றது என தெரியாமல் குழப்பம்?
X

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரண்டாவது நாளாக குவிந்த காய்ச்சல் நோயாளிகள்.

Kanchipuram News in Tamil -தமிழகத்தில் ஆண்டுதோறும் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு காச்சல் பாதிப்பு பரவலாக இருக்கும். கடந்த ஒரு வார காலமாகவே அனைத்து வயதுடைய தரப்பினரும் காய்ச்சல் காரணமாக கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் வடகிழக்கு பருவமழை முடியும் வரை சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் காய்ச்சல், சளி, தலைவலி, இருமல் பாதிப்பு உள்ளவர்கள் முகாம்களில் வந்து சிகிச்சை பெறலாம் எனவும், ஓரே பகுதியில் 3 பேருக்கு மேல் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதியில் சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம் எங்கெல்லாம் நடைபெறுகிறது என்பதை மாவட்ட நிர்வாகம் முறையாக சுகாதார துறை மூலம் தெரிவிக்கவில்லை.

இதனால் காய்ச்சலுக்கு உள்ளானார்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையை அதிக அளவில் இன்றும் நாடி தங்களுக்கு காய்ச்சல் குறித்த சிகிச்சை பெற்று திரும்பி வருகின்றனர்.

இதுகுறித்து எந்த செய்தி குறிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொண்டு அருகிலேயே சிகிச்சை பெற முடியாமல் போன நிலை ஏற்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Sep 2022 10:35 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!