வங்கி வழிப்பறி குறித்த விழிப்புணர்வு கூட்டம்
காஞ்சிபுரத்தில் வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலிடம் எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நபர்கள் தொழில் மற்றும் தங்களின் குழந்தைகளின் கல்வி , மருத்துவம் சார்ந்த நிகழ்வுகளுக்கு நகரத்தை நோக்கி வரும் நிலையில் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கி மற்றும் ஏடிஎம் சார்ந்து அமைந்துள்ளது.இதை சாதகமாக்கி வழிப்பறி கும்பல் அவர்களுக்கு உதவுவது , கவனத்தை திசை திருப்பி பண பறிப்பில் ஈடுபடுகின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள 30க்கும் மேற்பட்ட வங்கி மற்றும் 70 ஏடிஎம் மையங்களில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த திட்டமிட்டு கம்மவார் பாளையம் , செவிலிமேடு வங்கி வாடிக்கையாளர்களுக்கு மேலாளர் உடன் இணைந்து காவல் ஆய்வாளர் ராஜகோபால் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதேபோல் ஏடிஎம் மையத்திற்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு வழிப்பறி கும்பல் நடவடிக்கைகள் மற்றும் அதிலிருந்து காத்து கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.