/* */

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
X

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த சித்ராவை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த தென்னரசு மனைவி சித்ரா,36. இவர் தனது மகன் அஜித்,13; சுவாஸ்திகா,9; ஆகியோருடன் மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அவர் திடீரென அலுவலக நுழைவுவாயிலில் நின்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றினார். உடன் அங்கிருந்த போலீசார் சித்ரா வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

போலீசாரின் விசாரணையில், சு.கள்ளிப்பாடியில் உள்ள எனது பாட்டனார் சொத்தை, கடந்த 25 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன். எங்கள் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராமநாதன், நான் அனுபவிக்கும் இடத்தை அவரது பெயருக்கு பட்டா பெற்று விற்பனை செய்ய உள்ளார்.

இந்த இடத்தை காலி செய்ய மறுத்ததால் கடந்த 7 ம் தேதி அடியாட்களை வைத்து ஆயுதங்களால் எங்களை தாக்கினார். எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் புகார் அளிக்க வந்ததாக தெரிவித்தார். பின்னர் அவர் கலெக்டரிடம் தனது புகார் மனுவை அளித்தார்.

Updated On: 26 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்