/* */

ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து நவ. 17, 18ல் கடையடைப்பு

நூல் விலை உயர்வை கண்டித்து, நலம்பர் 17, 18 தேதிகளில், ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து நவ. 17, 18ல் கடையடைப்பு
X

இதுகுறித்து, ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் கே.கலைசெல்வன் கூறியதாவது: தேசிய அளவில் ஜவுளி சார்ந்த தொழிலில், பல கோடி பேர் உள்ளனர். அண்மைக் காலமாக நூல் விலை அடிக்கடி உயர்வதால், இத்தொழில் சார்ந்தவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த 40 நாள்களில் 40 ஆம் எண் நூல் ஒரு கிலோ ரூ. 250இல் இருந்துரூ 330ஆகவும், 30ஆம் எண் நூல் ரூ 200இல் இருந்து ரூ. 290ஆகவும், 20ஆம் எண் நூல் 140இல் இருந்து ரூ, 190 ஆகவும் வெப்ட் வகை நூல் 40ஆம் எண் ஒரு பை ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரத்து 200ஆகவும் உயர்ந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜவுளி ஆர்டர் பெற்றவர்கள் நூல் விலை உயரும்போது அதனை பெற்ற தொகைக்குள் முடிக்க முடியாமல் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.

எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, நூல் விலையை இரண்டு மாதம் அல்லது மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே உயர்த்த வேண்டும். தினமும் உயர்த்தும் நடைமுறையைக் கைவிட வேண்டும்.. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் 17, 18 ஆம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி சார்ந்த கடைகள், ஜவுளிக் கிடங்குகள் போன்றவை பங்கேற்கும் என்றார்.

Updated On: 13 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது