/* */

மொடக்குறிச்சி அருகே குழந்தையுடன் மனைவி மாயம், கணவர் போலீசில் புகார்

சிவகிரியில் மூன்று வயது குழந்தையுடன் காணாமல்போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

மொடக்குறிச்சி அருகே  குழந்தையுடன் மனைவி மாயம், கணவர் போலீசில் புகார்
X

கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்தவர் மாவீரன் (வயது 32). இவரின் மனைவி பிரியா (வயது 25). தம்பதியருக்கு ஐந்து வயதில் மகள், மூன்று வயதில் மகன் உள்ளனர். ஒரு மாதத்துக்கு முன்பு சிவகிரி அருகே தாண்டாம்பாளையத்துக்கு மனைவி, மகனுடன் மாவீரன் வந்தார். அங்கு குடும்பத்துடன் வசித்துக் கொண்டு கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். மகள் சொந்த ஊரிலேயே உள்ளார். அவரை பார்க்க கடந்த, 6ம் தேதி சென்றார்.

இதையடுத்து, ஊர் திரும்பிய நிலையில் பள்ளிபாளையத்தில் உள்ள தனது தாயை பார்க்க சென்றுள்ளார். அங்கிருந்து மொபைல்போனில் மனைவியிடம் பேசியுள்ளார். மகனுடன் பள்ளிபாளையம் வருவதாக தெரிவித்து பஸ்ஸில் வந்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாவீரன் அளித்த புகாரின்படி சிவகிரி போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

Updated On: 13 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?