/* */

ஈரோடு மாநகரில் குடிநீர் குழாய் இணைக்கும் பணி துவக்கம்

ஊராட்சிக் கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் இன்று தொடங்கியது.

HIGHLIGHTS

ஈரோடு மாநகரில் குடிநீர் குழாய் இணைக்கும் பணி துவக்கம்
X

 ஊராட்சிக் கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் குடிநீர் குழாய் இணைக்கும் பணியானது ஜி.எச்.ரவுண்டானாவில் தொடங்கியது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ.484 கோடி செலவில் ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக பவானி அருகே ஊராட்சிக்கோட்டை வரதநல்லூரில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப் பட்டு சுத்திகரித்து ஈரோட்டுக்கு குழாய் மூலமாக கொண்டு வரப்படுகிறது.

சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், வ.உ.சி. பூங்காவில் 118 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும் என 2 பிரமாண்ட தரைமட்ட தொட்டிகளில் தண்ணீர் விடப்படுகிறது. அங்கிருந்து 67 மேல் நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வீடுகளுக்கு இணைக்கப் பட்ட குழாய்கள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும், ஈரோடு மாநகரில் சில பகுதிகளில் குடிநீர் இணைப்பு செய்யும் பணி முழுமையாக நிறைவடையவில்லை.

எனவே அந்த பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பணிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் மற்றும் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

நாளை 21ம் தேதி வாசுகி முதல் வீதி, வாசுகி வீதி, நாச்சியப்பா வீதி, தெப்பக்குளம் வீதி ஆகிய பகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதே போல 22ம் தேதி பாவாடை வீதியில் குடிநீர் குழாய் இணைக் கும் பணிகள் நடைபெறுகிறது. 23ம் தேதி பவர் ஹவுஸ் ரோடு, 24ம் தேதி ஈரோடு மூலனூர் ரோடு சோலார் ரவுண்டானா பகுதி. 26ம் தேதி ஈரோடு கரூர் ரோடு எச்.பி. பெட் ரோல் பங்க் பகுதி. 27ம் தேதி குறிக்காரன்பாளையம் பஸ் நிறுத்தம், 28ம் தேதி பூந்துறை ரோடு கல்யாண சுந்தரம் வீதி, கல்யாண சுந்தரம் முதல் வீதி, 2-வது வீதி. 29ம் தேதி கல்யாண சுந்தரம் 3-வது வீதி ஆகிய பகுதிகளில் பணிகள் நடக் கிறது.

மேலும், 30ம் தேதி பூந்துறை ரோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகில், டாலர்ஸ் காலனி வீட்டுவசதி வாரியம், பிரப்ரோடு கலைமகள் பள்ளி சாலை, வாமலை வீதி, எஸ்.கே.சி. ரோடு பிரிவு, முத்துவேலப்பா வீதி ஆகிய பகுதிகளிலும், 31ம் தேதி மற்றும் 2ம் தேதி ரங்கம்பாளையம் ரயில்வே பாலம் அருகில், 3ம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனை பின்புற சாலை, சென்னிமலை ரோடு முத்தம்பாளையம், சுவஸ்திக்ரவுண்டானா அருகில் வ.உ.சி. பூங்கா சாலை ஆகிய பகுதிகளிலும், 8ம் தேதி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சம்பத்நகர் சாலையிலும் குடிநீர் குழாய் இணைக் கும் பணிகள் நடைபெறும் என்று குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் கூறினர்.

Updated On: 20 Dec 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை