/* */

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைப்பு

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சித்தோட்டில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

HIGHLIGHTS

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைப்பு
X

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சித்தோட்டில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம், காங்கயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் தலைமை வாக்குசாவடி அலுவலர் வாக்குப்பதிவு இயந்திரங்களை (விவிபேட், பேலட், கன்ட்ரோல் யூனிட்) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள், வேட்பாளரின் பிரதிநிதி முன்னிலையில் பூட்டி சீல் வைத்தனர்.

இதையடுத்து தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட 20 மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டியினை பெற்று, அனுமதிக்கப்பட்ட ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஏற்றி துப்பாக்கி ஏந்திய மத்திய போலீசார் மற்றும் பிற மாநில போலீசார் பாதுகாப்புடன், ஈரோடு அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையொட்டி, முன்னதாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் 6 சட்டமன்ற தொகுகளின் வாக்கு பெட்டிகள் வைக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நேற்று இரவு 8 மணிக்கு பிறகு ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வர துவங்கின. இதையடுத்து பாதுகாப்பு அறையில் சட்டமன்ற தொகுதி மற்றும் வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகள் வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்து பூட்டி சீல் வைத்தனர்.

மேலும், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறையில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று இரவு முதலே மத்திய போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தீ போன்ற அசம்பாவிதங்களை தடுக்க வாக்கு எண்ணிக்கை மையத்தின் வளாகத்தில் ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பாதுகாப்பு பணி வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் மாதம் 4ம் தேதி வரை தொடரும். தொடர்ந்து தினந்தோறும் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 20 April 2024 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்