/* */

ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதி மீறல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்கு

ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதி மீறல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்கு
X

வழக்குப் பதிவு (பைல் படம்).

ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக டாக்டர் கார்மேகன் போட்டியிடுகிறார். இவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து ஊர்வலமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்றனர்.

அப்போது, தேர்தல் பறக்கும் படையினர் அனுமதியின்றி ஊர்வலம் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினர். ஆனால், அறிவுறுத்தலை மீறியும் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்மேகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அனுமதியின்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 March 2024 5:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா