/* */

அந்தியூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் காயம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் காயம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபி பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 47). நேற்று மாலை அந்தியூர் அருகே எண்ணமங்கலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, தனது மகன் தஸ்வந்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மூலக்கடை பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த பர்கூர் பெரியூரை சேர்ந்த சக்திவேல், மோகன்குமார் வந்த வாகனத்தின் மீது மோதினார்.

இதில், மோகன்குமார், அவரது மகன் தஸ்வந்த் மற்றும் சக்திவேல் ஆகிய மூவரும் காயமடைந்தனர். அதன் பின் மூன்று பேரும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து, மோகன்குமார் அளித்த புகாரில் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 March 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  3. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  4. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  5. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  8. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  9. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  10. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி