Begin typing your search above and press return to search.
ஈரோடு: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
ஈரோடு மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுபான கடைகளை மூட வேண்டுமென கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்
HIGHLIGHTS
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்களை முட வேண்டும் என ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், நாளை (14.04.2022) வியாழக்கிழமை மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் முலம் இயங்கி வரும் மதுபானக் கடைகள் மற்றும் அத்துடன் இணைந்த மது அருந்தகங்கள் மற்றும் மதுபானம் விற்க உரிமம் பெற்ற தனியார் விடுதிகள் அனைத்தும் இன்று இரவு 10 மணி முதல், வரும் 15 ஆம் தேதி காலை 12 மணி வரை மூடி வைக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டால் மதுபான விதிமுறைகளின்படி அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்