Begin typing your search above and press return to search.
ஈரோட்டு சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென சாரல் மழை
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று திடீரென சாரல் மழை பெய்தது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்சமாக 102 டிகிரி நெருங்கியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இந்தநிலையில் மாலை 5 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது. கொடுமுடி, பவானிசாகர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் மி.மீ பின்வருமாறு:-
கொடுமுடி - 1.0 மி.மீ
சத்தியமங்கலம் - 4.0 மி.மீ
பவானிசாகர் - 6.2 மி.மீ
சென்னிமலை - 3.0 மி.மீ
எலந்தகுட்டைமேடு - 1.8 மி.மீ
கொடுமுடி - 1.0 மி.மீ
குண்டேரிப்பள்ளம் - 6.4 மி.மீ
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 23.4 மி.மீ
மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 1.3 மி.மீ