Begin typing your search above and press return to search.
கவுந்தப்பாடி அருகே வைக்கோலில் தீ விபத்து ஏற்பட்டு சேதம்
கவுந்தப்பாடியில் வைக்கோலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் தீயில் எரிந்து சேதமானது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கவுந்தபாடி மணியன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் வைக்கோல் போரில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து செங்கோடன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பவானி தீயணைப்பு வீரர்கள் தீயை விரைந்து அணைத்து ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோலை தீ விபத்தில் இருந்து காப்பாற்றினர்.
இருப்பினும் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் தீயில் எரிந்து சேதமடைந்தது.தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீ காரணம் குறித்து விசாரணை நடத்தியதில் அணைக்கப்படாத புகையில் இருந்து தீ விபத்து நிகழ்ந்திருக்க கூடும் என தெரியவந்துள்ளது.