/* */

பூட்ஸ் காலால் எட்டி உதைத்த விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே ஆடு திருடிய நபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

பூட்ஸ் காலால் எட்டி உதைத்த விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
X

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூட்ஸ் காலால் எட்டி உதைத்த வீடியோ காட்சி.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி நாகராஜ் என்பவரது வெள்ளாட்டை திருடிய போது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த குமார் (வயது 41) என்பவர் பிடிபட்டார். அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் அவரை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி அடித்தனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த புஞ்சைபுளியம்பட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆடு திருடிய குமாரை பொதுமக்கள் முன்னிலையில், பூட்ஸ் காலால் எட்டி உதைத்துள்ளார்.

இதனை அங்கிருந்த, அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது இந்த வீடியோ வைரலானதால் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 15 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...