/* */

அந்தியூரில் தேரை சுற்றி அமைக்கப்பட்ட கொட்டகை சூறைக் காற்றால் சேதம்

அந்தியூர் தேர்வீதியில் தேரை சுற்றி அமைக்கப்பட்ட கொட்டகை சூறைக் காற்றில் சேதமானதால், புதிதாக சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

அந்தியூரில் தேரை சுற்றி அமைக்கப்பட்ட கொட்டகை சூறைக் காற்றால் சேதம்
X

பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே, பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர், அந்தியூர் தேர்வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை, வெயிலால் பாதிக்காமல் இருக்க, தேரை சுற்றிலும் தகரத்தாலான கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சூறாவளி காற்றால் தேரை சுற்றி அமைக்கப்பட்ட தகர கொட்டகை சாய்ந்து சேதமடைந்தன.மேலும் கொட்டகைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள சுமார் 4 அடி உயரம் கொண்ட கான்கிரீட் திட்டுக்களும் சேதமடைந்தன.

இதையடுத்து, சாய்ந்த கொட்டகையை அகற்றி, தேரைச் சுற்றி சுவர் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, கடந்த 2 தினங்களாக தகரத்தை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 5 May 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு