/* */

சத்தி பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கு விற்பனை

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று நடைபெற்ற ஏலத்தில் கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கு விற்பனையானது

HIGHLIGHTS

சத்தி பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கு விற்பனை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர், பண்ணாரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.

அங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே கரட்டூர் ரோட்டில் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.

அதன்படி இன்று (ஏப்.,25) செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.350 ,

முல்லைப்பூ - ரூ.160 ,

காக்கடா - ரூ.350 ,

செண்டுமல்லி - ரூ.26 ,

கோழிக்கொண்டை - ரூ.54 ,

கனகாம்பரம் - ரூ.400 ,

சம்பங்கி - ரூ.20 ,

அரளி - ரூ.150 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.200-க்கும் விற்பனையானது.

Updated On: 25 April 2023 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு