/* */

பவானி அருகே சிறுமி பலாத்காரம்: இளைஞர் போக்சோவில் கைது

பவானி அருகே சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானி அருகே சிறுமி பலாத்காரம்: இளைஞர் போக்சோவில் கைது
X

கைது செய்யப்பட்ட அருண்குமார்.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை.இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பவானி காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பவானி போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் பவானியில் தனியார் உணவகத்தில் தங்கி வேலை பார்க்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 20) என்ற இளைஞர் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்தது தெரியவந்தது.

மேலும், வாலிபர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து வாலிபரை பவானி காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளைஞர் அருண்குமாரை கைது செய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோபி கிளை சிறையில் அடைத்தனர்.

Updated On: 12 Sep 2022 2:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்