/* */

பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடையில்லா தடுப்பூசி: எம்எல்ஏ ஜெயக்குமார்

பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடையில்லா தடுப்பூசி வழங்கப்படும் என பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடையில்லா தடுப்பூசி: எம்எல்ஏ ஜெயக்குமார்
X

பெருந்துறை தடுப்பூசி முகாமை ஜெயக்குமார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இங்கு தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தப்பட்டு இன்று முதல் பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். பின்னர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள இருப்பு குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:

பொதுமக்களுக்கு தடையில்லாமல் தினந்தோறும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்,

Updated On: 3 Jun 2021 11:02 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு