/* */

வாய்க்கால் கரை உடைந்து விவசாய நிலம், வீடுகளுக்குள் புகுந்த நீர்

கீழ்பவானி பாசன வாய்க்காலின் கரை உடைந்து விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

HIGHLIGHTS

வாய்க்கால் கரை உடைந்து விவசாய நிலம், வீடுகளுக்குள் புகுந்த நீர்
X

வாய்க்கால் கரை உடைந்து விவசாய நிலத்திற்குள் புகுந்த நீர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கீழ்பவானி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த 15 ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2000 கனஅடி நீர் வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் பெருந்துறை அருகே உள்ள நசியனூர் அடுத்த மலையபாளையம் என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி பாசன வாய்க்காலின் கரை உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் உடைந்த கரையை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வாய்காலில் 710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 Aug 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!