/* */

சென்னிமலையின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

சென்னிமலையின் 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பிரச்சினை தீரும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

சென்னிமலையின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சாமிநாதன்.

ஈரோடு மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னிமலையில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னிமலை பேரூராட்சி மற்றும் பத்து ஊராட்சிகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் வரை மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இல்லாத வகையில் தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய குடிநீர் திட்டம் நிறைவு பெற்ற பின் இப்பகுதியில் 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பிரச்சனை இருக்காது என்றார். மேலும் இதுபோன்று ஆய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Updated On: 12 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?