/* */

அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

பெருந்துறை அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் மூன்று பேர் படுகாயம்

HIGHLIGHTS

அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
X

சேலத்தில் இருந்து 35 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சோளிபாளையம் என்ற இடத்தில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.

எனினும் விபத்தில் படுகாயமடைந்திருந்த பஸ் டிரைவர் செந்தில் குமார், கன்டெக்டர் கதிரேசன் மற்றும் பயணி ஒருவர் என மூன்று பேரையும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மற்ற பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பினர். இதனையடுத்து ஜேசிபி வண்டி வரவழைத்து பஸ்ஸை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 7 May 2021 2:11 AM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  2. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  4. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  5. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  6. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  7. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  10. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க