/* */

பாலியல் தொல்லை புகாரை கண்டுகொள்ளாத தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

புகாருக்கு நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள், பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பாலியல் தொல்லை புகாரை கண்டுகொள்ளாத தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
X

போராட்டக்களத்தில் பள்ளி மாணவிகள்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு ஈரோடு மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த அடிப்படையில் நேற்று முன் தினம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விரைந்த போலீசார், ஆசியர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். இதில் உயிரியல் ஆசிரியர் திருமலை மூர்த்தி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மாணவிகள் மற்றும் பெற்றோர் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள், பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On: 22 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  3. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  4. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  5. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  6. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  7. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  9. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  10. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு