Begin typing your search above and press return to search.
பவானி: மொபட் மீது கார் மோதி விபத்து முதியவர் பலி
அம்மாபேட்டை அருகே கார் மோதிய விபத்தில் மொபட்டில் சென்று முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
அம்மாபேட்டை அடுத்துள்ள பூதப்பாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன் (75). விவசாயம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் பூதப்பாடியிலிருந்து அம்மாபேட்டை பகுதிக்கு அந்தியூர்-அம்மாபேட்டை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அம்மாபேட்டை தபால் நிலையம் பிரிவு அருகே வந்தபோது அவருக்கு பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.
இதில் பச்சியப்பன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து முதியவரின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.