/* */

பவானி அருகே வேகத்தடையை உயரபடுத்தி அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

பவானி-மேட்டூர் சாலையில் ஆர்டிஓ அலுவலகம் முன்பு உள்ள வேகத்தடையை உயரபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பவானி அருகே வேகத்தடையை உயரபடுத்தி அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
X

 இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கீழே விழுவது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி.

ஈரோடு மாவட்டம் பவானி-மேட்டூர் சாலையில் ஊராட்சிக்கோட்டை அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக பேருந்து நிறுத்தம் உள்ளது. இதன், அருகில் சிறிய அளவிலான வேகத்தடை இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த வேகத்தடைகள் மீது பூசப்பட்டுள்ள வெள்ளை பெயிண்ட் மேட்டூரிலிருந்து செல்லும் சாம்பல் லாரிகளில் இருந்து சாம்பல்கள் சிதறி வேகத்தடை முழுவதுமாக மறைந்தன.

இதனால், வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை தெரியாதவாறு, உள்ளதால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி அவ்வப்போது கீழே விழுந்து விபத்துக்கள் நிகழ்கின்றன. இதனையடுத்து, இப்பகுதியில் போடப்பட்டுள்ள வேகத்தடையை சற்று உயரமாக மாற்றியமைக்கவும் ,வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன என எச்சரிக்கை பலகை சாலையோரத்தில் வைக்க வேண்டுமென பொதுமக்களும் , வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 23 May 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?