/* */

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொடுமுடி பகுதியில் உள்ள மக்கள் காவிரி ஆற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
X

கொடுமுடி காவிரி ஆறு.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் சக்ககைபோடு போட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில் மேட்டூர் அணைகக்கும் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. அதனால் காவிரி ஆற்றில் தற்போது நாற்பதாயிரம் கன அடிக்கு மேலான நீர் சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் பவானிசாகர் அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது அந்த அணையில் 104 அடி நீர் நிரம்பியுள்ள நிலையில் எந்த நேரத்திலும் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படலாம் என்ற நிலை உள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயரவும், ஆற்றில் மீ்ன்பிடிக்கவோ, துணி துவைக்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் செல்லும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் காரணாம்பாளையம், ஊஞ்சலூர், கொடுமுடி உள்ளிட்ட ஊர்களில் வாழும் மக்கள் காவிரி ஆற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என கொடுமுடி வருவாய்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Updated On: 19 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது