/* */

ஈரோடு கோர்ட்டில் அமைச்சர் முத்துசாமி ஆஜர்

ஊரடங்கு சட்டத்தை மீறியதாக பதியபட்ட வழக்கில் அமைச்சர் முத்துசாமி ஈரோடு கோர்ட்டில் இன்று ஆஜராகினார்.

HIGHLIGHTS

ஈரோடு கோர்ட்டில் அமைச்சர் முத்துசாமி ஆஜர்
X

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செய்லாளர் முத்துசாமி தலைமையில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொரோனா காலகட்டம் என்பதால் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக முத்துசாமி உட்பட 10 திமுக நிர்வாகிகள் மீது டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் டவுன் போலீசார் முத்துசாமி உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் முத்துசாமி ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆனார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை ஈரோடு ஜெ.எம்.எண் 1 கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்காக அமைச்சர் முத்துசாமி ஜெ.எம்.எண் 1 கோர்ட்டில் ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் வடிவேல் வழக்கை வரும் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதையடுத்து அமைச்சர் முத்துசாமி உட்பட திமுக நிர்வாகிகள் கோர்ட்டில் இருந்து வெளியே சென்றனர். முன்னதாக அமைச்சர் கோர்ட்டில் ஆஜராவதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Updated On: 9 Nov 2021 4:48 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி