/* */

அந்தியூரில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் அழிப்பு

அந்தியூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.1லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை ஏரியில் கொட்டி அழித்தனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் அழிப்பு
X

மது பாட்டில்கள் போலீசார்  ஏரியில் கொட்டி அழித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையம் மற்றும் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்க முயன்றவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று கோபி கலால் வட்டாட்சியர் தியாகராஜன் முன்னிலையில் அந்தியூர் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் மது பாட்டில்களை அந்தியூர் பெரிய ஏரியில் போட்டு உடைத்தனர். இதில் கடந்த ஆறு மாதங்களாக பறிமுதல் செய்யப்பட்ட 700-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானங்களை விற்கும் நேரத்தில் போலீசார் பிடித்த மது பாட்டில்களை உடைத்த சம்பவம் பொதுமக்களிடத்திலே பெரும் வரவேற்பை பெற்றது.

Updated On: 5 July 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  6. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  7. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  10. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...