/* */

ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரம்

ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரம்
X

ஈரோடு மாநகர மாவட்ட திமுக இளைஞரணியினர் மக்களை கவரும் வகையில் ஈரோட்டில் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகர மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மக்களை கவரும் வகையில் ஈரோட்டில் நூதன பிரசாரம் நடந்தது. அதாவது லாரியில் பெட்ரோல் பங்க், சமையல் கேஸ் மற்றும் பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் வாக்குறுதிப்படி கேஸ், பெட்ரோல் விலை குறைக்கப்படும் போன்ற வாசகங்கள் வைக்கப்பட்டிருந்தன.

மேலும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றியும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இந்த பிரசாரம் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே இருந்து புறப்பட்டு ஈஸ்வரன் கோவில் வீதி, பிருந்தா வீதி, மணிக்கூண்டு மற்றும் ஜவுளி மார்க்கெட் பகுதிகளில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆதரவாக உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் தலைமையில் நடந்த இந்த பிரசாரத்தில் மண்டல பொறுப்பாளர் சீனிவாசன், திமுக மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ,ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் ஏராளமான இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் இளைஞர் அணியை சேர்ந்தவர் ஆவார். மேலும் அவர் இளைஞர் அணி மாநில செயலாளரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவரை எப்படியாக வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு திமுக இளைஞர் அணியினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 April 2024 6:16 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  9. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  10. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை