Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் 72 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில், இன்று 72 பேருக்கு கொரோனா உறுதியானது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 461 ஆனது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 289 ஆக உயர்ந்தது.
இன்று 56 பேர் குணமடைந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 94 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். தற்போது தொற்று உள்ள 461 பேர் பல்வேறு மருத்துவனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.