/* */

அந்தியூரில் கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

அந்தியூரில் கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 சவரன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அந்தியூரில் கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
X

அந்தியூரில் கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர், வனச்சரக அலுவலகம் எதிரே வசித்து வருபவர் பழனிச்சாமி. அந்தியூர் தாலுகா கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகரான இவர், நேற்று இரவு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

வீட்டில் யாரும் இல்லாததை கண்காணித்து வந்த மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டிலிருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இன்று காலையில் வீட்டிற்கு வந்த பழனிச்சாமி பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 18 Aug 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்