பாதுகாப்பு பிரச்சனையால் அந்தியூரில் நடிகர் சூர்யாவின் படம் திரையிடவில்லை..
Anthiyur Balamurugan Theatre-நடிகர் சூர்யாவின் திரைப்படத்திற்கு எதிர்ப்பு, அந்தியூர் பாலமுருகன் தியேட்டரில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
Anthiyur Balamurugan Theatre-ஈரோடு மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் உள்ளன. இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்து வெளியான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் ஈரோடு முழுவதும் 20 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.இதற்கிடையே ஜெய்பீம் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சை காட்சிகளுக்கு பிரச்சினை கிளப்பிய வன்னியர் சங்கத்தினர், எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தியேட்டர்களில் திரையிட அனுமதி வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.கடும் எதிர்ப்பைத் மீறி இன்று, ஈரோடு மற்றும் அந்தியூர் பாலமுருகன் தியேட்டரில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிடப்பட்டது.இதைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அந்தியூர் பாலமுருகன் தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் இன்று பாலமுருகன் தியேட்டரில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2