/* */

நவ. 1ல் பள்ளிகள் திறப்பு: வகுப்பறைகளில் தூய்மைப்பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் திறக்க ஆயத்த பணிகள் வழிகாட்டு முறை குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நவ. 1ல் பள்ளிகள் திறப்பு: வகுப்பறைகளில் தூய்மைப்பணி தீவிரம்
X

பள்ளி வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. 

ஈரோடு மாவட்டத்தில், பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவியர் நேரடியாக கல்வி கற்க வசதியாக நவம்பர் 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசு, தனியார் பள்ளிகள் ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள செடி,கொடிகள், புற்களை வெட்டி அகற்றுவது, கழிவறையை சுத்தம் செய்தல், வகுப்பறையில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் பல்வேறு பள்ளிகளிலும் ஆயத்த பணி தீவிரமாகி உள்ளது. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். எனவே, துவக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டும், கொரோனா வழிகாட்டு நெறிமுறை குறித்து பள்ளி கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 29 Oct 2021 12:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’