/* */

பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
X

கிணற்றில் விழுந்த மூதாட்டியை மீட்க்கும் தீயணைப்பு துறையினர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள ஆர் எஸ், கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த துளசிமணி என்பவரது மனைவி பாப்பாயி (வயது 90). கணவனை இழந்த இவர், தனது வீட்டு தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு உதவியாக இவரது தம்பி இருந்து வந்த தம்பி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோனார். தம்பி இறந்த துக்கம் தாளாமல் மன உளைச்சலுடன் இருந்து வந்த இவர், நேற்று வீட்டின் பின்பகுதியில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த 10 அடி தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக, அக்கம்பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி, கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி மூதாட்டியின் சடலத்தை மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 2 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?