/* */

கோபி கல்லூரி மாணவிகள் தேசிய கபாடி போட்டிக்கு தேர்வு

கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள பி.கே.ஆர் மகளிர் கல்லூரி மாணவிகள் தேசிய கபாடி போட்டிக்கு தேர்வு.

HIGHLIGHTS

கோபி  கல்லூரி மாணவிகள் தேசிய கபாடி போட்டிக்கு தேர்வு
X

பைல் படம்.

அரியானா மாநிலத்தில் வருகிற பிப்ரவரி மாதம் தேசிய அளவிலான கேலோ இந்தியா கபாடி விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதையொட்டி சென்னை உள் விளையாட்டு அரங்கில் - விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு கபாடி கழகம் மூலம் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

மாணவிகள் பிரிவில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் வைதேகி, சுவேதா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இதையொட்டி அந்த 2 மாணவிகளை கல்லூரி தாளாளர் பி.என்.வெங்கடாசலம், முதன்மை நிர்வாக அலுவலர் ஜெகதா லட்சுமணன், முதல்வர் மைதிலி, பேராசிரியர்கள், அலுவலர்கள், உடற்கல்வி இயக்குநர் சங்கீதமுத்து, பயிற்சியாளர்கள், எஸ்.பி.பழனிச்சாமி, கிருஷ்ண வேணி உள்பட பலர் வாழ்த்தி பாராட்டினர்.

Updated On: 8 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?