/* */

ஈரோட்டில் பாலினம் அறியும் தடை சட்ட விழிப்புணர்வு பேரணி

ஈரோட்டில் பாலினம் அறிதல் தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஈரோட்டில் பாலினம் அறியும் தடை சட்ட விழிப்புணர்வு பேரணி
X

பாலினம் அறியும் தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) அம்பிகாசண்முகம் , ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.

ஈரோட்டில் பாலினம் அறிதல் தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் சார்பில் கருவுறுதலுக்கு முன் மற்றும் பின் பாலின தேர்வு தடை செய்யும் சட்டம் 1994ஐ பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இப்பேரணியானது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) அலுவலகத்தினை சென்றடைந்தது. இப்பேரணியில் "பாதுகாப்போம், பாதுகாப்போம் பெண் குழந்தைகளை பாதுகாப்போம்", "கொல்லாதே கொல்லாதே பெண் சிசுவை கொல்லாதே", சொல்லாதே சொல்லாதே பாலினத்தை சொல்லாதே" "செல்லாதே செல்லாதே சிறைச்சாலைக்கு செல்லாதே" "கருவிலிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா கண்டறிவது தடை சட்டம் 1994"ஐ பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஈரோடு நந்தா செவிலியர் கல்லூரியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை எந்திச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இப்பேரணியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) அம்பிகாசண்முகம், மகப்பேறு மருத்துவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Oct 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்