/* */

ஈரோடு மாவட்டத்தில் 16.19 லட்சம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 16 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 16.19 லட்சம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்

தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் எண்ணிக்கை இந்த மாத ஆரம்பத்திலிருந்தே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகளின் துரித நடவடிக்கைகளும், ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. முககவசம் கட்டாயமாக்கப்படுதல் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான முக்கியத்துவத்தையும் அறிவுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கான மெகா முகாம்களும் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 20 கட்டங்களாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 பேர் உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். கடநத ஜனவரி 31-ம் தேதி வரை மாவட்டத்தில் 16 லட்சத்து 19 ஆயிரத்து 638 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா 2-வது தவணை தடுப்பூசி 12 லட்சத்து 24 ஆயிரத்து 043 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். எனவே மொத்தம் 28 லட்சத்து 43 ஆயிரத்து 681 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 2 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை