/* */

ஈரோட்டில் நாளை பேரமைப்பு மாவட்டப் பொதுக்குழு கூட்டம்: விக்கரமராஜா பங்கேற்பு

Erode news- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை ) காலை 11.30 மணிக்கு தண்ணீர்பந்தல்பாளையத்தில் நடக்கிறது.

HIGHLIGHTS

ஈரோட்டில் நாளை பேரமைப்பு மாவட்டப் பொதுக்குழு கூட்டம்: விக்கரமராஜா பங்கேற்பு
X
Erode news- வணிகர் சங்க பேரமைப்பின் ஈரோடு மாவட்டப் பொதுக்குழு கூட்டம் தொடர்பான அழைப்பிதழ்.

Erode news, Erode news today- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை ) காலை 11.30 மணிக்கு தண்ணீர்பந்தல்பாளையத்தில் நடக்கிறது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் இரா.க.சண்முகவேல் தலைமையில் ஈரோடு - சத்தி சாலையில் பாவாய் தண்ணீர்பந்தல்பாளைத்தில் உள்ள மகா திருமண மண்டபத்தில் நாளை (ஏப்ரல் 21) காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

அனைவரையும் மாநகரச் செயலாளர் அ.அந்தோணி யூஜின் வரவேற்று பேசுகிறார். மாவட்டச் செயலாளர் பொ.இராமச்சந்திரன் ஆண்டறிக்கையை வாசிக்கிறார். மாவட்டப் பொருளாளர் உதயம் பொ.செல்வம் வரவு செலவு அறிக்கையை வாசிக்கிறார். கோவை மண்டலத் தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் புதிய நிர்வாகிகளை அறிவிக்கிறார். மாநிலத் துணைத் தலைவர் ப.திருமூர்த்தி புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்குகிறார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு மே 5ம் தேதி நடைபெற உள்ள 41வது வணிகர் தினம் மாநில மாநாடு குறித்து சிறப்புரையாற்றுகிறார்.

கூட்டத்தில் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட, மாநகர நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், இணைப்பு சங்க நிர்வாகிகள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் உள்பட பலர் திரளாக பங்கேற்கிறார்கள்.

Updated On: 20 April 2024 11:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்