/* */

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு நீட்டிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு நீட்டிப்பு
X

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய், இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய், ஒற்றைப்படை மதகுகளின் முதல்போக நன்செய் பாசனத்திற்கு 15.08.2021 முதல் 12.12.2021 வரை தண்ணீர் திறந்து விட ஏற்கெனவே ஆணையிடப்பட்டு, அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தற்போது, பவானிசாகர் அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு, 12.12.2021-க்கு பிறகு நீட்டிப்பு செய்து, தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று, கீழ்பவானி முறைநீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் கோரினர். இதை ஏற்று, பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய், இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் முதல்போக நன்செய் பாசனத்திற்கு 13.12.2021 முதல் 15.01.2022 முடிய மேலும் 34 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது.

இதனால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என, அரசு கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 13 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  3. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  4. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  6. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  7. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  8. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவுடன் இணைத்திருந்த...
  9. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  10. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...