/* */

ஈரோட்டில் ஓய்வு பெற்ற போராசிரியர் வீட்டில் கொள்ளை: 2 பேர் கைது

ஈரோட்டில் ஓய்வு பெற்ற போராசிரியர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் ஓய்வு பெற்ற போராசிரியர் வீட்டில் கொள்ளை: 2 பேர் கைது
X

கைது செய்யப்பட கொள்ளையர்கள் தமிழ்வாணன், அரவிந்தன்.

ஈரோடு பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போராசிரியர் சண்முகவேலன். கடந்த மாதம் இவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 23 சவரன் தங்கநகை மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தெடர்பாக ஈரோடு வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையாக கூறி இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த தமிழ்வாணன், அரவிந்தன் என்பதும் மூன்று பேர் சேர்ந்து ஓய்வு பெற்ற போராசிரியர் வீட்டில் கொள்ளையடித்ததையும் ஒப்பு கொண்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 1 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் டிவி ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On: 19 Aug 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...